இயேசு பாலனாய் பிறந்தார்

Yesu Balanai Piranthar

Unknown

Writer/Singer

Unknown

இயேசு பாலனாய் பிறந்தார்
இயேசு தேவனே பெத்லகேமிலே
ஏழைக் கோலமாய் முன்னணை
புல்லணை மீதிலே பிறந்தார்

1. உன்னதத்தில் தேவ மகிமை
பூமியிலே சமாதானமும்
மானிடரில் பிரியம் உண்டாவதாக
என்று தேவ தூதர் பாடிட – இயேசு

2. விண்ணை வெறுத்த இம்மானுவேல்
விந்தை மானிடவதாரமாய்த்
தன்னைப் பலியாகத் தந்த ஒளி இவர்
தம்மை பணிந்திடுவோம் வாரும் – இயேசு

3. ஓடி அலைந்திடும் பாவியைத்
தேடி அழைக்கும் இப்பாலகன்
பாவங்களின் நாசர் பாவிகளின் நேசர்
பாதம் பணிந்திடுவோம் வாரும் – இயேசு

4. கைகள் கட்டின தேவாலயம்
கர்த்தர் தங்கும் இடமாகுமோ
நம் இதயமதில் இயேசு பிறந்திட
நம்மை அளித்திடுவோம் வாரும் – இயேசு

5. அன்பின் சொரூபி இப்பாலனே
அண்டி வருவோரின் தஞ்சமே
ஆறுதல் அளித்து அல்லல் அகற்றிடும்
ஆண்டவரை பணிவோம் வாரும் – இயேசு