உம் அன்பின் கயிற்றால்
என்னை இழுத்தீர்
உம் அணைக்கும் கரத்தால்
என்னை அணைத்தீர்
எதற்குமே உதவாத என்னை தேடி வந்தீர்
எட்டாத உயரத்திலே என்னை கொண்டுவந்தீர்
கன்மலையின் மறைவுக்குள்ளாய் என்னை நிறுத்தினீர்
கரத்தின் நிழலினாலே என்னைமூடினீர்
1.குப்பையில் இருந்தேன் இயேசுவே உந்தன்
கரத்தால் தூக்கி எடுத்தீர்
உந்தனின் அன்பின் அடையாளமாகவே
என்னை நீர் நிறுத்தினீர் உலகிற்கு முன்னாலே
2. முடியாது (நடக்காது) என்றேன் வார்த்தையை தந்தீர்
உம்மீது நம்பிக்கை வைத்தேன்
ஏற்ற காலத்தில் நிறைவேற்றி காண்பித்தீர்
உந்தனின் சாட்சியாய் என்னை நீர் நிறுத்தினீர்