பிறந்த நாள் முதலாய்
உம் தோளில் சுமந்தீரே
தகப்பனிலும் மேலாய்
தனி பாசம் வைத்தீரே - 2
மெதுவான தென்றல்
கொடுங்காற்றாய் மாறி
அடித்தவேளையிலும்
என்னை கீழ விட வில்லை - 2
- பிறந்த
தீங்கு நாளிலே
கூடார மறைவிலே
ஒளித்து வைத்தீரே
உம் வேளைக்காகவே - 2
கன்மலை மேலென்னை
உயர்த்தி வைத்தீரே
துதிக்கும் புது பாடல்
என் நாவில் தந்தீரே - 2
- பிறந்த
பிறக்குமுன்னமே
என் பேயரை அறிந்தீரே
அவயம் அனைத்துமே
அழகாக வரைந்தீரே - 2
என்னிடம் உள்ளதையே
உம்மிடம் ஒப்படைத்தேன்
அந்நாள் வரையிலுமே
அதை காத்திட வல்லவரே - 2
- பிறந்த