ஆராய்ந்து முடியாத அதிசயம் செய்தவர்
அளவிட முடியாத அன்பு வைத்தவர்
எண்ணி முடியாத இரக்கம் எண்ணில் களித்தவர்
என்னையே கவர்ந்து கொண்ட நேசர் பெரியவர்
எல்லை இல்லா நன்மைகளை எனக்கும் என்றும் செய்தவர்
எண்ணிலடங்கா கிருபை எனக்கு ஈந்தவர்
ஏற்றம் இறக்கத்தினில் என் கூட வந்தவர்
என் பெயரை உள்ளங்கையில் வரைந்து கொண்டவர்
உம்மை போல நான் உலகில் கண்டதில்லை
உம்மை போல ஒரு நேசர் நான் இனியும் காண்பதில்லை (2)
ஒண்ணுமில்லா என்னையே உண்மையாய் நேசிக்க
உம போல தெய்வம் இங்கு யாரும் இல்லையே
உறவுகள் மறந்தாலும் மாறாத நேசரே
உம் அன்புக்கு ஈடு இணை இல்லையே
பாடுகள் என்னையே சூழ்ந்து நின்றாலும்
படைத்தவர் நீர் என்னோடு பயம் இல்லையே
இரதங்களும் குதிரைகளும் என் பின் தொடர்ந்தாலும்
உம்மை போல நான் உலகில் கண்டதில்லை
உம்மை போல ஒரு நேசர் நான் இனியும் காண்பதில்லை (2)
மண்ணான என்னையே மகனாய் அழைத்தவர் நீர்
நன்மையான ஈவுகளை எனக்கு தந்தீரே
என்னை சுகமாக்க நீர் காயப்பட்டீரே
உம உயிர் கொடுத்து எனக்கு ஜீவன் தந்தீரே
பாதை எல்லாம் உம் தூதர்கள் கொண்டு என்னை
கால் கல் இடறாமல் காத்து கொண்டீரே
எனக்காய் பரிந்து பேசி நாட்களை கூட்டி தந்து
நித்தம் ஒரு புது நாளை காண செய்தீரே
உம்மை போல நான் உலகில் கண்டதில்லை
உம்மை போல ஒரு நேசர் நான் இனியும் காண்பதில்லை (2)