ஆ! அம்பர உம்பரமும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்
அனுபல்லவி
ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார்
சரணங்கள்
1. அன்பான பரனே! – அருள் மேவுங் காரணனே! – நவ
அச்சய சச்சித – ரட்சகனாகிய
உச்சிதவரனே! — ஆ! அம்பர
2. ஆதம் பவமற, – நீதம் நிறைவேற, – அன்று
அல்லிராவினில் – தொல்லையிடையினில்
புல்லணையிற் பிறந்தார். — ஆ! அம்பர
3. ஞானியர் தேட , – வானவர் பாட , -மிக
நன்னய , உன்னத – பன்னரும் ஏசையா
இந்நிலம் பிறந்தார். — ஆ! அம்பர
4. கோனவர் நாட , – தானவா கொண்டாட – என்று
கோத்திரர் தோத்திரஞ் சாற்றிட வே , யூத
கோத்திரன் பிறந்தார். — ஆ! அம்பர
5. விண்ணுடு தோண , – மன்னவர் பேண , – ஏரோது
மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார். — ஆ! அம்பர