மன்னியும் இயேசுவே எந்தன் பாவங்களை
மன்னியும் நேசரே எந்தன் மீறுதலை
மன்னியும் இயேசுவே மன்னியும் என் நேசரே
1. அறியாமல் நான் செய்த பாவங்கள் மன்னியும்
புரிந்த மீறுதல் நீக்கிவிடும் – (2)
உடலால் உள்ளத்தாலே – என்
வாழ்நாளில் செய்த பாவங்கள்..
மலைபோல் வந்து நிற்குதே-உம்
இரத்தத்தால் கழுவுமய்யா…
2. உளையான சேற்றினில் மூழ்கிக்கிடந்தேன்
களைகளை வாழ்வினில் பெருகச்செய்தேன் -2
கனிகொடா மரம் போல் – நான்
வளர்ந்து நின்றேனய்யா
விளையாத பாழ்நிலம் போல்-உம்முன்
வெறுமையாய் நின்றேனய்யா
3. ஈசோப்பினாலே என்னைக் கழுவும்
உறைந்த மழையிலும் வெண்மையாவேன் -2
அக்கிரமம் நீக்கி என்னில் – சுத்த
இருதயம் சிருஷ்டித்திடும்
உம் கோபம் ஒரு நிமிஷம் – நித்ய
கிருபையாய் மனமிரங்கும்
4. உம் சமுகம் விட்டு என்னைத் தள்ளாதேயும்
தூய ஆவியை நீக்காதிரும் – 2
இரட்சண்ய சந்தோஷத்தை – என்னில்
திரும்பத் தாருமய்யா
உற்சாக ஆவி நித்தம் – என்னைத்
தாங்கச் செய்யுமய்யா