இது வரை நடத்தினீர்
இனியும் நடத்துவீர் கிருபையால்
இது வரை தாங்கினீர்
இனியும் தாங்குவீர் அன்பினாலே
உம் பாதம் ஒன்றே போதும்
என் சூழ்நிலைகள் மாறும்
உம்மை நம்பும் எந்தன் வாழ்க்கையில்
வெட்கம் என்பதில்லையே - 2
ஆராதிப்பேன் உம்மையே வாழ்நாளெல்லாம்
உம்மை என்றும் ஆராதிப்பேன் - 2
1.நிழலிலே என்னை தங்க செய்து
அரவணைத்து காத்து கொண்டீரே
சகதியில் விழுந்த என்னை
சடுதியாய் தூக்கி சுமந்தீரே
தினமும் என்னை தேற்றி
தயவாலே உயர்த்தினீர்
தீமை ஒன்றும் நெருங்காமல்
விழியில் வைத்தீரே - 2
ஆராதிப்பேன் உம்மையே வாழ்நாளெல்லாம்
உம்மை என்றும் ஆராதிப்பேன் - 2
2.கிருபையில் என்னை நடக்க செய்து
ஜீவனை எனக்குள் வைத்தீரே
உம் கரத்தினால் என் கரம் பிடித்து
வழுவாமல் எனை காத்தீரே
யாரும் தடை செய்ய முடியா நன்மைகள் தந்தீரே
எந்தன் கண்கள் காணாத வாழ்வை தந்தீரே - 2
ஆராதிப்பேன் உம்மையே வாழ்நாளெல்லாம்
உம்மை என்றும் ஆராதிப்பேன் - 2
இது வரை நடத்தினீர்
இனியும் நடத்துவீர் கிருபையால்
இது வரை தாங்கினீர்
இனியும் தாங்குவீர் அன்பினாலே
உம் பாதம் ஒன்றே போதும்
என் சூழ்நிலைகள் மாறும்
உம்மை நம்பும் எந்தன் வாழ்க்கையில்
வெட்கம் என்பதில்லையே - 2
ஆராதிப்பேன் உம்மையே வாழ்நாளெல்லாம்
உம்மை என்றும் ஆராதிப்பேன் - 4